ADDED : மார் 04, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது; 8.20 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இம்மாதம் 1ம் தேதி துவங்கியது. தேர்வு எழுத, 7.72 லட்சம் பேருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. முதல் நாள் தேர்வில், 13,407 பேர் பங்கேற்கவில்லை. ஆங்கில மொழி பாடத்தேர்வு நாளை நடக்கிறது.
இந்நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று துவங்க உள்ளது. இதில், 8.20 லட்சம் மாணவ, மாணவியர்; 5,000 தனி தேர்வர்கள், 187 சிறை கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முதல் நாளில், தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.

