sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களுக்கு பிரதமர் நல்ல செய்தி சொல்ல வேண்டும் *பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

/

ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களுக்கு பிரதமர் நல்ல செய்தி சொல்ல வேண்டும் *பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களுக்கு பிரதமர் நல்ல செய்தி சொல்ல வேண்டும் *பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களுக்கு பிரதமர் நல்ல செய்தி சொல்ல வேண்டும் *பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை


ADDED : ஏப் 03, 2025 10:10 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:'இலங்கை செல்லும் பிரதமர் மோடி, கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை அதிபரிடம் பேச வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் அவர் அளித்த பேட்டி:

கடந்த 3 மாதத்தில் 147 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, 19 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே 20 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்திய பிரதமர் இலங்கை சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேச உள்ளார். அப்போது, இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் கால முறைவைத்து மீன்பிடிப்பது, கச்சத்தீவை மீட்பது குறித்து வலியிறுத்த வேண்டும்.

இலங்கையில் இருந்து, பிரதமர் மோடி வரும் 6ல் ராமேஸ்வரம் வருகிறார். அப்போது, தமிழக மீனவர்களுக்கு நல்ல செய்தியை அவர் சொல்ல வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ., பாதை அமைக்கும் பொறுப்பை, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கியது சமூக நீதிக்கு பாதிப்பை உள்ளாக்கும். முதற்கட்ட திட்டத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இயக்கி பராமரித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தமிழக அரசு முதன்மை பங்குதாரராக உள்ளது.

அதேபோல் இத்திட்டத்தை டில்லி மெட் ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதால், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காது. தமிழக அரசிடம் பேசி இம்முடிவை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்ததா அல்லது தன்னிச்சையாக எடுத்ததாக என தெரியவில்லை. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

வக்பு வாரிய திருத்த சட்டத்தை பா.ம.க., ஆதரிக்கவில்லை. அதனால்தான் சட்டசபையில், தமிழக அரசின் தீர்மானத்தை பா.ம.க.,-எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்துள்ளனர்.

ராஜ்யசபாவில் வக்பு சட்ட திருத்தம் வரும் போது, பா.ம.க., அதை ஆதரிக்காது.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us