பா.ம.க., - எம்.எல்.ஏ.,வின் 'அருள்' வேண்டும்; அமைச்சர் விருப்பம்
பா.ம.க., - எம்.எல்.ஏ.,வின் 'அருள்' வேண்டும்; அமைச்சர் விருப்பம்
ADDED : பிப் 20, 2026 03:31 AM
சென்னை:
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க.,- கருணாநிதி: பல்லாவரத்தில் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம் பாழடைந்துள்ளது. அதனை புனரமைத்து தர வேண்டும். பல்லாவரம் பெரிய பாலத்திற்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும்.
அமைச்சர் சாமிநாதன்: மறைமலை அடிகள் இல்லத்தை புனரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மேம்பாலத்திற்கு பெயர் வைப்பது, எங்கள் வேலையில்லை. நெடுஞ்சாலைத்துறை அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அந்த பணிகளை மேற்கொள்ளும்.
பா.ம.க., அருள்: பாரதியாருக்கு பின், சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தவர் கவிஞர் அர்த்தநாரீஸ்வர வர்மா. சேலத்தில் பிறந்தவர். அவருக்கு சிலை அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் சாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மீண்டும் அரசு அமைந்த பின், எதிர்காலத்தில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். தி.மு.க., அரசு அமைவதற்கு, அருள் போன்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

