sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க., போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் கேள்வி

/

பா.ம.க., போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் கேள்வி

பா.ம.க., போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் கேள்வி

பா.ம.க., போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் கேள்வி

8


ADDED : ஜன 02, 2025 11:36 AM

Google News

ADDED : ஜன 02, 2025 11:36 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பா.ம.க., மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், தடையை மீறி பா.ம.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சவுமியா உள்பட பா.ம.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பா.ம.க., வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததுடன், கடுமையான கருத்துக்களையும் முன்வைத்தார்.

அவர் கூறியதாவது: பா.ம.க., போராட்டத்தை அனுமதிக்க உத்தரவிட முடியாது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? வெறும் விளம்பரத்துக்காக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். சமூகத்தில் ஆண், பெண் என பாகுபாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம், எனக் காட்டமாக கூறினார்.






      Dinamalar
      Follow us