உள்ளடக்கத்திற்கு செல்ல
பா.ம.க., மாநில நிர்வாகி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு
பா.ம.க., மாநில நிர்வாகி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு
ADDED : ஜூன் 24, 2026 11:48 PM
அ நிறம் | அளவு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த புளியந்தாங்கல், ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 68. பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
பா.ம.க.,வில் மாநில பொதுக்குழு உறுப்பினர். இவர், ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே உள்ள முகுந்தராயபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நேற்று சடலமாக கிடந்தார். காட்பாடி ரயில்வே போலீசார் மூர்த்தி சடலத்தை மீட்டனர்.
அதிகாலை நேரத்தில் மூர்த்தி எதற்காக அங்கு சென்றார்; ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
