ADDED : மார் 04, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில், : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரம் சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு, பூஜைக்காக வைக்கப்பட்ட படையல் மதுவை குடித்த, அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார், 50, இறந்தார்.
அவரது நண்பர் அருள், 33, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்வகுமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, கோட்டார் போலீசார் மூன்று பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

