ADDED : அக் 28, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களை, திடலின் உள்ளே பகல் 2:00 மணி முதல் அனுமதிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதிகாலையிலே குவிந்ததால் பரபரப்பு நிலவியது. காவலர்களின் கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்து உள்ளே நுழைந்து மேடையின் எதிரே வி.ஐ.பி.,க்கள் மற்றும் நிருபர்கள் அமர போடப்பட்டிருந்த நாற்காலிகளை ஆக்கிரமித்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பவுன்சர்களால் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும், போலீசார் உதவியோடு தொண்டர்களை அப்புறப்படுத்தி பார்வையாளர்கள் சேர்களில் பவுன்சர்கள் அமர வைத்தனர்.

