sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரவுடிகள் சொத்து விபரம் சேகரிக்கிறது காவல் துறை

/

ரவுடிகள் சொத்து விபரம் சேகரிக்கிறது காவல் துறை

ரவுடிகள் சொத்து விபரம் சேகரிக்கிறது காவல் துறை

ரவுடிகள் சொத்து விபரம் சேகரிக்கிறது காவல் துறை

2


ADDED : டிச 20, 2024 12:37 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:37 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மாநிலம் முழுதும் உள்ள 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகளின் பெயரில் உள்ள சொத்து விபரங்களை சேகரிக்க, காவல் துறை சார்பில் வருவாய் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. ரவுடிகளுக்கு பின்புலமாக உள்ள, நிதி ஆதாரங்களை கண்டறியும் பணியும் நடக்கிறது.

இதில், சந்தேகத்திற்குரிய 41 ரவுடிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடக்கிறது. மீதமுள்ள ரவுடிகளின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ரவுடிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சரிபார்க்க, காவல் துறை சார்பில் வருவாய் துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

ரவுடிகள் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் கூடுதல் டி.எஸ்.பி.,க்கள் வாயிலாக, இதற்கான கடிதம் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us