திருநெல்வேலி அருகே ரவுடி கும்பல் அட்டூழியம்:ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
திருநெல்வேலி அருகே ரவுடி கும்பல் அட்டூழியம்:ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
UPDATED : மார் 07, 2024 10:19 PM
ADDED : மார் 07, 2024 07:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருக வெள்ளங்குழி கிராமத்தில் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி 42 என்ற கட்டுமான தொழிலாளி போதை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அந்த கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். கார்களை தாக்கினர். அரசு பஸ்கள் உடைத்து சேதம் தடுத்த போலீஸ்காரர் செந்தில்குமார் வெட்டுப்பட்டார். ரவுடி கும்பலை போலீசார் சுட்டதில் ரவுடி பேச்சிதுரை என்பவர் இறந்ததாக கூறப்படுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

