sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உ.பி., பெண் துறவி மீதான தாக்குதல் புகார் பொய் போலீசார் தகவல்

/

உ.பி., பெண் துறவி மீதான தாக்குதல் புகார் பொய் போலீசார் தகவல்

உ.பி., பெண் துறவி மீதான தாக்குதல் புகார் பொய் போலீசார் தகவல்

உ.பி., பெண் துறவி மீதான தாக்குதல் புகார் பொய் போலீசார் தகவல்


ADDED : மார் 12, 2024 02:28 AM

Google News

ADDED : மார் 12, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பாதயாத்திரை சென்ற பெண் துறவி ஷிப்ராபதக்வுடன் 38, வந்த சகோதரர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மையில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அயோத்தியை சேர்ந்த பெண் துறவி ஷிப்ராபதக் பஞ்சபூதங்கள், நீராதாரங்களை பாதுகாப்பது குறித்தும், ஸ்ரீராமபிரான் வந்து சென்ற ராமேஸ்வரம் வரை 4000 கி.மீ., பாதயாத்திரை மேற்கொண்டார். அவருடன் தந்தை, சகோதரர் உடன் வந்தனர்.

பரமக்குடி பகுதியில் வந்த போது சிலர் ஸ்ரீராமருக்கு எதிராக கோஷமிட்டு ராமர் படக்கொடியை கிழித்து, சகோதரர் வந்த காரின் கண்ணாடியை உடைத்ததாக ஷிப்ராபதக் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் டி.எஸ்.பி., நிரேஸ் தலைமையில் 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஷிப்ரா பதக் அளித்த புகாரில் உண்மை இல்லை.

தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடக்கிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.---------






      Dinamalar
      Follow us