sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குதிரை தாலி கிழங்கில் போதை ஆய்வுக்கு அனுப்புகிறது போலீஸ்

/

குதிரை தாலி கிழங்கில் போதை ஆய்வுக்கு அனுப்புகிறது போலீஸ்

குதிரை தாலி கிழங்கில் போதை ஆய்வுக்கு அனுப்புகிறது போலீஸ்

குதிரை தாலி கிழங்கில் போதை ஆய்வுக்கு அனுப்புகிறது போலீஸ்

1


ADDED : ஜன 09, 2025 06:57 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:57 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கவுஞ்சி சுற்று பகுதிகளில் விளையும் குதிரை தாலி கிழங்குகளை முகர்ந்தாலே போதை ஏறுவதாக வீடியோ வைரலானது. கிழங்கில் போதை தன்மை உள்ளதா என மது விலக்கு போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

கொடைக்கானல் கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் குதிரை தாலி கிழங்கு வேலியோரங்களில் விளைகிறது. மூலிகை பயன்பாட்டிற்கு சிலர் இவற்றை பறித்து செல்வர். பூண்டியை சேர்ந்த ராஜா என்பவர் இந்த கிழங்குகளை நசுக்கி மூக்கில் வைத்து நுகர்ந்தால் போதையை ஏற்படுத்துவதாக கூறி சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குதிரை தாலி கிழங்கை நுகர்ந்து பார்த்து போதை தலைக்கேறியது போல் சைகை காட்டி வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.

இதைப்பார்த்த பலர் ராஜாவை தேடி பூண்டி வர தொடங்கினர். இந்த விவகாரம் மதுவிலக்கு போலீசாருக்கு தெரிய அவர்கள் ராஜாவை அழைத்து எச்சரித்தனர்.

மேலும் கிழங்கில் போதை தன்மை உள்ளதா என சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us