sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிருஷ்ணகிரியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்!

/

கிருஷ்ணகிரியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்!

கிருஷ்ணகிரியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்!

கிருஷ்ணகிரியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்!

5


ADDED : பிப் 21, 2025 12:29 PM

Google News

ADDED : பிப் 21, 2025 12:29 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சுரேஷ் என்பவருக்கு காலில் காயமும், நாராயணனுக்கு கால் முறிவும் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இருவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றவாளிகள் கத்தியால் தாக்கியதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

பின்னர் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தப்பி செல்ல முயன்ற நாராயணனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.






      Dinamalar
      Follow us