sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!

/

துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!

துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!

துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!

45


UPDATED : ஏப் 25, 2025 04:59 PM

ADDED : ஏப் 25, 2025 12:47 PM

Google News

UPDATED : ஏப் 25, 2025 04:59 PM ADDED : ஏப் 25, 2025 12:47 PM

45


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ''மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர்'' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழக அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, கவர்னர் ரவி தலைமையில் ஊட்டியில் தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு உட்பட்ட 17 பல்கலைகளில் இருந்து துணைவேந்தரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை.



இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நேரில் சென்று நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மோசமாக உள்ளது.

மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

துணைவேந்தர்களின் வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டி, 'மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது' என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை. சில துணைவேந்தர்கள் ஊட்டிக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. கல்வி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல துணைவேந்தர்கள் மாநாடு உதவியாக இருக்கும். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள். இதுபோன்ற சூழல் இதுவரை ஏற்பட்டது இல்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிங்கிள் டிஜிட்டல் எண்களை கூட படிக்க தெரியவில்லை. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

கல்வித்துறை வளர்ச்சி அடைவது அவசியம்!

மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது அவசியம். பயங்கரவாதம் உலக அளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது. குருகுல கல்வி மிகவும் சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us