sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 விசாரணைக்கு சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு

/

 விசாரணைக்கு சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு

 விசாரணைக்கு சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு

 விசாரணைக்கு சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு


ADDED : டிச 05, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரை, அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடுகின்றனர்,

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொத்தையை சேர்ந்தவர் இசக்கிபாண்டி, 30; இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், அவர் தென்காசி மாவட்டம், நெட்டூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், இசக்கிபாண்டி நண்பருடன் நெட்டூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று, மனைவியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்தார். தகவலில், அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் முருகன் உட்பட இருவர், இசக்கிபாண்டியை கண்டித்து அனுப்பினர்.

அங்கிருந்து கிளம்பி சென்ற இசக்கிபாண்டி, மீண்டும் அவரது நண்பருடன் புறக்காவல் நிலையம் சென்று, முருகனிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி தப்பினார்.

அக்கம்பக்கத்தினர் முருகனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆலங்குளம் போலீசார், இசக்கிபாண்டி, அவரது நண்பரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us