ADDED : டிச 05, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்துக்கள் முதுகில் குத்திய முதல்வர்
தீபத்துாணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்ற முடிவை எடுத்தது செயல் அலுவலரா? அவர் வெறும் அம்பு மட்டுமே. எய்தியது யார்? பின்னால் இருப்பது ஹிந்து விரோத எண்ணம் உடைய, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தான்.
அதேசமயம், ஹிந்து சமய அறநிலைய துறையை வைத்து, தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்வதாக, முதல்வர் நாடகம் நடத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் ஏதும் பேசவில்லை. ஆனால், கூட்டணி கட்சியினரை துாண்டிவிட்டு, ஹிந்துக்களின் நம்பிக்கையை கேவலமாக விமர்சிக்க வைத்தார்.
ஹிந்துக்களின் பணத்தை சுரண்டி கொள்ளை அடிக்கவும், ஆன்மிக நம்பிக்கையை தகர்க்கவுமே, தி.மு.க., ஆட்சியில் அறநிலையத் துறை செயல்படுகிறது.
- முருகன்
மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

