sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுச்சாவடி அலுவலர் ஊக்கத்தொகை உயர்வு

/

ஓட்டுச்சாவடி அலுவலர் ஊக்கத்தொகை உயர்வு

ஓட்டுச்சாவடி அலுவலர் ஊக்கத்தொகை உயர்வு

ஓட்டுச்சாவடி அலுவலர் ஊக்கத்தொகை உயர்வு


ADDED : நவ 08, 2025 02:29 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஓட்டுச்சாவடி அலுவலர்களின் ஆண்டு ஊக்கத் தொகையை, 14,000 ரூபாயாக, இந்திய தேர்தல் கமிஷன் உயர்த்தியுள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஓட்டுப் பதிவு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளும், இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இவர்களின் பணி அர்ப்பணிப்பு காரணமாக, போலிகள் இல்லாத, தகுதியான வாக்காளர்களை கொண்ட பட்டியல் வெளியாக வா ய்ப்புள்ளது.

தமிழகத்தில், 68,467 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பணிகளை மேற்கொள்ளும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஆண்டு ஊக்கத்தொகையாக, 7,180 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதை, 14,000 ரூபாயாக, இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தி உள்ளது.

பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகையாக, 6,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. தமிழகத்திலும், இதுபோன்று சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.






      Dinamalar
      Follow us