sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

/

பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

3


UPDATED : ஆக 29, 2024 04:59 PM

ADDED : ஆக 29, 2024 07:02 AM

Google News

UPDATED : ஆக 29, 2024 04:59 PM ADDED : ஆக 29, 2024 07:02 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய மனு மீதான தீர்ப்பை நாளைக்கு ( ஆக.,30) விசாரணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார்.

அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ், 2017ல் பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின், ஜாமினில் வெளியே வந்த நிலையில், காதர் பாஷா, 'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார்.

அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்கு பதிந்து, கைது செய்தார். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சி.பி.ஐ.,வழக்கு பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேல் மீது, டில்லி சி.பி.ஐ.,போலீசார் வழக்கு பதிந்தனர். 'இதை சி.பி.ஐ.,விசாரிக்க அதிகாரமில்லை. உள்நோக்கில் சட்டவிரோதமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, பொன்மாணிக்கவேல், உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கை இன்று ஒத்தி வைத்தார். இன்றைய விசாரணைக்கு பிறகு தீர்ப்புக்காக நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us