sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குழப்பத்தை ஏற்படுத்த ஒட்டப்பட்ட போஸ்டர்

/

குழப்பத்தை ஏற்படுத்த ஒட்டப்பட்ட போஸ்டர்

குழப்பத்தை ஏற்படுத்த ஒட்டப்பட்ட போஸ்டர்

குழப்பத்தை ஏற்படுத்த ஒட்டப்பட்ட போஸ்டர்


ADDED : மார் 29, 2025 06:52 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.வெ.க., பொதுக்குழு கூட்டத்தை ஒட்டி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை புறநகர் மாவட்ட செயலர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், 'தளபதி அவர்களை அழைத்து வரும், தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் அரசியல் ஆசான், த.வெ.க., பொதுச்செயலர், வருங்கால தமிழக முதல்வரை வரவேற்கிறோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், ''சில விஷமிகள் வேண்டும் என்றே என்னை முதல்வர் என, குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். விஜய்-க்கு கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர்.

அந்த தொண்டர்களில் நானும் ஒருவன். இந்த மாதிரி போஸ்டர்களை யாராவது ஒட்டினால், அதை பெரிதுபடுத்த வேண்டாம். என் பெயரை பயன்படுத்தி, போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டால், அது நானாகி விட முடியுமா?'' என்றார்.

மாவட்ட செயலர் சரவணன் கூறுகையில், ''சென்னையில், மறைமலை நகர் பகுதியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எனக்கும் இந்த போஸ்டருக்கும் சம்பந்தம் இல்லை.

''எங்களுக்கு ஒரே தலைவர் விஜய் மட்டும் தான். முதுகில் குத்தும் வகையில் மாற்றுக் கட்சியினர், இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us