sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் தாமரை ஊற்று ஊரணி நீர்

/

மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் தாமரை ஊற்று ஊரணி நீர்

மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் தாமரை ஊற்று ஊரணி நீர்

மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் தாமரை ஊற்று ஊரணி நீர்


ADDED : ஜூலை 25, 2011 02:01 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டம் தென்கரை ஊராட்சி நாராயணபுரத்தில், தாமரை ஊற்று ஊரணி நீரை மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதை சமூக விரோதிகள் அசுத்தப்படுத்துகின்றனர். இந்த ஊரணியில் தாமரை மலர்கள் நிரம்பியுள்ளன. நாகமலை அடிவாரத்தில் ஆண்டு முழுவதும் சுணை நீர் உற்பத்தியாகி, தாமரை ஊற்று ஊரணியை அடைகிறது. மலையில் மூலிகைகள் உள்ளதால், இந்நீரில் மருத்துவ குணம் உண்டு. பருகினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகிறது என மக்கள் நம்புகின்றனர். மதுரை மற்றும் பிற மாவட்ட மக்கள் இந்த நீரை கேன், பாட்டில்களில் எடுத்து செல்கின்றனர். சமீபத்தில், ஊரணியை ரூ.5 லட்சத்தில் சீரமைத்தனர். ஆனால் தற்போது படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை விட்டுச் செல்கின்றனர். புதிதாக கட்டியுள்ள சிமென்ட் தொட்டியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தண்ணீரை விளை நிலத்திற்கு பாய்ச்சுகின்றனர். சிலர் அசுத்தம் செய்கின்றனர். இதனால், வெகு தூரத்திலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல வரும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். ஊரணியை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும். குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். சமூக விரோதிகளை ஊராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும். இதன்மூலம், ஊரணியின் புனிதம் காக்கப்படும்.






      Dinamalar
      Follow us