தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு போராட்டம்


ADDED : மார் 12, 2024 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 02:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி, 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி, சிந்தாமணி பகுதிகளில் 6,000 விசைத்தறிகள் செயல்படுகின்றன. இவற்றில் 16,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இரு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே கூலி உயர்வு வழங்க கோரி, 15 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us