வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
ADDED : டிச 17, 2025 11:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார்.
வேலுார் மாவட்டம், அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்தில், ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோவில் உள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை புரிந்தார். அவரை கவர்னர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் வரவேற்றனர்.
ஸ்ரீ நாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோவில்களில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்தார். பின், சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைத்து, மரங்களை நட்டார்
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

