sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் கோவிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி

/

ராமேஸ்வரம் கோவிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி

ராமேஸ்வரம் கோவிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி

ராமேஸ்வரம் கோவிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி


ADDED : ஜன 21, 2024 02:19 AM

Google News

ADDED : ஜன 21, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : பிரதமர் மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கடல், கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.

நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து தினமும் இந்தியாவில் உள்ள முக்கிய புனித தலங்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

பூரண கும்ப மரியாதை


நேற்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசித்தார். கோவிலுக்கு சென்ற பிரதமரை, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஹரிஸ் பட்டர் ஆகியோர் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர்.

கோவில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, தாயார், ரங்கநாதர் சன்னிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

உற்சவர் நம்பெருமாளை வணங்கி, துளசி தீர்த்தம் பருகிய பிரதமருக்கு, 'சடாரி'யை தலை மற்றும் புஜங்களில் வைத்து ஆசி வழங்கப்பட்டது.

பின், கோவிலில் அரங்கேற்ற மண்டபத்தில் நடந்த கம்பராமாயணம் பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று, ராமாயணம் கேட்டார். பிரதமருக்காக கோவிலில் மலர் பந்தல் அமைத்து, அனைத்து சன்னிதிகளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

இதன்பின், மதியம் 2:15 மணிக்கு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வந்தார்.

வரவேற்பு


பிரதமரை, அமைச்சர் மதிவேந்தன், ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் வரவேற்றனர். அங்கிருந்து பிரதமர் மோடி, காரில் புறப்பட்டார்.

அப்போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என பக்தி கோஷம் எழுப்பி பிரதமரை மலர் துாவி வரவேற்றனர்.

அங்கிருந்து ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் 10 நிமிட ஓய்வுக்கு பின், மதியம் 3:15 மணிக்கு அக்னி தீர்த்த கடலுக்கு சென்று கடலில் புனித நீராடினார்.

பின், ஈர துணியுடன் அங்கிருந்த பேட்டரி காரில் கோவில் கிழக்கு கோபுர வாசலுக்கு மதியம் 3:30 மணிக்கு வந்தார். பிரதமருக்கு கோவில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

பஜனை


கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களுக்கு நடந்து சென்று புனித நீராடினார். கோவில் வளாகத்தில் புதிய ஆடை அணிந்து, ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதி முன் அமர்ந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

மாலை 4:30 முதல், 6:00 மணி வரை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த ராமாயண கதை மற்றும் பஜனையில் பங்கேற்ற பிரதமர், 6:10 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார்.






      Dinamalar
      Follow us