sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வானத்து இளவரசி' சென்னை வருகை

/

'வானத்து இளவரசி' சென்னை வருகை

'வானத்து இளவரசி' சென்னை வருகை

'வானத்து இளவரசி' சென்னை வருகை


ADDED : ஜன 25, 2025 12:26 AM

Google News

ADDED : ஜன 25, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வானத்து இளவரசி' என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், ஜோர்டான் நாட்டிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக வந்தது.

அமெரிக்காவை சேர்ந்த, 'நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவனம், சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த, பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான, 747-400 விமானம், ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து, 124 டன் சரக்குகளுடன் புறப்பட்டு, சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககம் பகுதியில் நேற்று தரையிறங்கியது.

உடனடியாக சரக்கக பகுதி ஊழியர்கள், விமானத்தில் வந்த சரக்குகளை இறக்கியதோடு, சென்னையில் இருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் ஏற்றினர். பின், அந்த விமானம், சென்னையில் இருந்து துபாய் வழியாக, ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றது.

இந்த சரக்கு விமானம், 125 டன் சரக்குகளை ஒரே நேரத்தில் கையாளக்கூடியது. அது மட்டுமின்றி, பயணியர் விமானமாகவும் இயங்கக் கூடியது. ஒரே நேரத்தில் 660 பயணியர் பயணிக்கலாம்.






      Dinamalar
      Follow us