sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமையாசிரியர் தாராளம்: விமானத்தில் பறந்த மாணவர்கள்

/

தலைமையாசிரியர் தாராளம்: விமானத்தில் பறந்த மாணவர்கள்

தலைமையாசிரியர் தாராளம்: விமானத்தில் பறந்த மாணவர்கள்

தலைமையாசிரியர் தாராளம்: விமானத்தில் பறந்த மாணவர்கள்

29


ADDED : மார் 23, 2025 09:15 AM

Google News

ADDED : மார் 23, 2025 09:15 AM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடியை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் தன் சொந்த செலவில், 17 மாணவ - மாணவியரை விமானத்தில் அழைத்துச் சென்றார்.

துாத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ், 56; பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். வகுப்பில் பாடம் நடத்திய போது, விமானம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, மாணவ - மாணவியர் சிலர், 'விமானத்தில் பயணம் செய்ய எங்களாலும் முடியுமா?' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால், தன் சொந்த செலவில், ஐந்தாம் வகுப்பு மாணவர் ஐந்து பேர், மாணவியர் ஐந்து பேர், முன்னாள் மாணவர்கள் ஏழு பேர், பெற்றோர் இருவர் என மொத்தம், 19 பேரை, நெல்சன் பொன்ராஜ், நேற்று துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.

நெல்சன் பொன்ராஜ் கூறியதாவது: எங்களால் ரயில், விமானத்தில் செல்ல முடியுமா என, மாணவர்கள் கேள்வி எழுப்பினர். வறுமையைக் காரணம் காட்டி அவர்கள் கேட்டது எனக்கு மிகவும் வலித்தது. அதனால் தான் இந்த பயணம். விமானத்தில் சென்னை சென்று, மெட்ரோ ரயிலில் பயணித்தோம். வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு சென்றோம்.

எனக்கு, 1 லட்சத்து, 5,000 ரூபாய் செலவானது. என் சொந்த பணத்தில் இந்த பயணத்தை ஏற்பாடு செய்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us