ADDED : பிப் 10, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக மின் வாரியத்திற்கு அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, மின் வழித்தடங்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் டிப்ளமா படிப்பு முடித்தவர்களில், 500 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சி பெறுவோருக்கு மாதம், 8,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
மத்திய தொழில் பழகுனர் வாரியம் வாயிலாக, மின் வாரியம், தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது.