ADDED : ஜன 02, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக, தமிழ்ச்சந்திரன் பணிபுரிந்து வருகிறார். ஐ.ஜி., ஆனந்த்குமார் சோமானி, மத்திய அரசு பணியில் உள்ளார். இருவருக்கும் கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
டி.ஐ.ஜி.,க்கள் சாமுண்டீஸ்வரி, முத்துசாமி, லட்சுமி, ஜெயஸ்ரீ, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், மயில்வாகனன் ஆகியோர் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
எஸ்.பி.,க்கள் அரவிந்தன், திருநாவுக்கரசு, வெண்மதி, விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், உமா, ஜெயந்தி, ராமர், மகேஷ்குமார், தேவராணி ஆகியோருக்கு, டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

