sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரை மாற்றக்கோரி போராட்டம்

/

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரை மாற்றக்கோரி போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரை மாற்றக்கோரி போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரை மாற்றக்கோரி போராட்டம்


ADDED : மார் 18, 2025 05:08 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; 'மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரை மாற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய பார்வையற்றோர் இணையம் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் பொதுச்செயலர் பாபு எழில் குணாளன் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவியின் மர்ம மரணம் குறித்து, துறை சார்பில் இதுவரை உரிய விசாரணையை ஆணையர் துவக்கவில்லை.

விரைவில் விசாரணையை துவக்கி, தொடர்புடைய விடுதி காப்பாளரை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக, 'புத்தகம் கட்டுநர் பயிற்சி' முடித்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்கப்படாமல் உள்ளது, அதை விரைந்து வழங்க வேண்டும். பட்டப்படிப்பு படிக்க இயலாத பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தொழில் பயிற்சி வழங்கி, அரசுப்பணி வழங்க வேண்டும்.

அரசு உதவித்தொகையை, மாதம் 3,0-00 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us