ராகுலுக்கு என் மீது தனிப்பட்ட அன்பு: வார்த்தையால் சொல்ல முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ராகுலுக்கு என் மீது தனிப்பட்ட அன்பு: வார்த்தையால் சொல்ல முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : அக் 27, 2025 11:07 AM

சென்னை: ராகுல் என் மீது தனிப்பட்ட முறையில் அன்பை காட்டுவார். அதனை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி அரங்கில், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சுயமரியாதை திருமணத்துக்கு திமுக ஆட்சியில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. திமுகவும், காங்கிரசும் ஒரு காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன.
நாட்டு நலன் கருதி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணியில் அதே சிந்தனையுடன் தற்போது ஒரே அணியில் பயணித்து கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் ராகுல், என் மீது தனிப்பட்ட முறையில் அன்பை காட்டுவார். அதனை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
என்னை எப்போது நேரில் பார்த்தாலும் மை டியர் பிரதர் என அழைப்பவர் ராகுல். நான் அவரை சகோதரர் என்பேன். என்னை தனது மூத்த அண்ணனாக ஏற்றுக்கொண்ட ராகுல் இந்திய மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார். திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றும். மணமக்கள் தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

