ADDED : ஜன 20, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜல்பைகுரி,மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி யையும், அசாமின் மேற்கு பகுதியையும் இணைத்து புதிய மாநிலம் அமைக்கும்படி, அனைத்து கம்தாபூர் மாணவர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஜல்பைகுரி மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலத்தில் ஆளும் திரிணமுல் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ., கட்சிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த மறியல் போராட்டத்தால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இரவு 7:00 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது.