sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடுத்தடுத்து 2 விபத்துகள் ரயில்வே வாரியம் ஆலோசனை

/

அடுத்தடுத்து 2 விபத்துகள் ரயில்வே வாரியம் ஆலோசனை

அடுத்தடுத்து 2 விபத்துகள் ரயில்வே வாரியம் ஆலோசனை

அடுத்தடுத்து 2 விபத்துகள் ரயில்வே வாரியம் ஆலோசனை


ADDED : ஜூலை 17, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தெற்கு ரயில்வேயில் அடுத்தடுத்து நடந்த இரு விபத்துகள் குறித்து, ரயில்வே வாரிய தலைவர் சதீஷ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 8ம் தேதி காலை 7:45 மணிக்கு, பள்ளி வாகனம் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் ரயில், மோதியது. இதில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, 13ம் தேதி டேங்கரில் டீசல் ஏற்றிச் சென்ற, சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின.

அடுத்தடுத்து நடந்த விபத்துகள் குறித்து, ரயில்வே வாரிய தலைவர் சதீஷ், சென்னை மற்றும் திருச்சி ரயில் கோட்ட அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த விபத்துகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கோட்ட ரயில்வே அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us