sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில்வே மேலாளரிடம் ரூ.50,000 மோசடி

/

ரயில்வே மேலாளரிடம் ரூ.50,000 மோசடி

ரயில்வே மேலாளரிடம் ரூ.50,000 மோசடி

ரயில்வே மேலாளரிடம் ரூ.50,000 மோசடி


ADDED : டிச 12, 2024 01:42 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை ரயில்வே பணிமனை மேலாளரிடம், சைபர் குற்றவாளிகள், ஆன்லைன் வாயிலாக, புதிய முறையில், 50,000 ரூபாய் மோசடி செய்துஉள்ளனர்.

சென்னையில் உள்ள ரயில்வே பணிமனையில் மேலாளராக பணிபுரிபவர் சச்சின் புனித்.

அவருக்கு, வாட்ஸாப் செயலியில், ரயில்வே பொதுமேலாளர் புகைப்படத்துடன் துவக்கப்பட்ட குழுவில் இருந்து, மருத்துவ செலவுக்கு, உடனடியாக 50,000 ரூபாய் வேண்டும் என, தகவல் வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் தெரிவித்த எண்ணுக்கு, 50,000 ரூபாய் அனுப்பி உள்ளார். பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, சென்னை பூக்கடை போலீசில் புகார் செய்தார். இப்புகார் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மர்ம நபர் ஊராட்சி தலைவர்களின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, தான் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரிவதாகவும், தன் மகனின் மருத்துவ செலவுக்கு, அவசரமாக பணம் தேவை எனக் கூறி பணம் கேட்டதாகவும், விசாரித்ததில் அவர் மோசடி நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இதுபோன்ற நபர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அஜய்குமார், ஊராட்சி தலைவர்களுக்கு, தகவல் அனுப்பி உள்ளார்.






      Dinamalar
      Follow us