sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துாத்துக்குடி - மதுரை ரயில் பாதை வேண்டாம் என தமிழக அரசு கடிதம் ரயில்வே அமைச்சர் தகவல்

/

துாத்துக்குடி - மதுரை ரயில் பாதை வேண்டாம் என தமிழக அரசு கடிதம் ரயில்வே அமைச்சர் தகவல்

துாத்துக்குடி - மதுரை ரயில் பாதை வேண்டாம் என தமிழக அரசு கடிதம் ரயில்வே அமைச்சர் தகவல்

துாத்துக்குடி - மதுரை ரயில் பாதை வேண்டாம் என தமிழக அரசு கடிதம் ரயில்வே அமைச்சர் தகவல்

7


ADDED : ஜன 11, 2025 12:01 AM

Google News

ADDED : ஜன 11, 2025 12:01 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:“துாத்துக்குடி -- மதுரை புதிய ரயில் திட்டம் வேண்டாம் எனக் கூறி, தமிழக அரசிடம் இருந்து, எழுத்துப்பூர்வமான கடிதம் வந்துள்ளது. எனவே, அத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது,” என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும், 'அம்ரித் பாரத் 2.0' படுக்கை வசதி மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி ரயில் பெட்டிகளையும், சுற்றுலா பயணியருக்கான பிரத்யேக பெட்டிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

நல்ல வரவேற்பு


பின்னர், அவர் அளித்த பேட்டி:

நாடு முழுதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஏழை, எளிய மக்களும், 'வந்தே பாரத்' ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக, குறைந்த கட்டணத்தில், 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

'அம்ரித் பாரத் 1.0' திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் கிடைத்த அனுபவத்தின்படி, தற்போது, 'அம்ரித் பாரத் 2.0' திட்டத்தின் கீழ், வந்தே பாரத் ரயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நீண்ட துார பயணியர் வசதிக்காக, இருக்கைகளில் அதிக தடிமனான குஷன்கள், பயணியரின் உடைமைகளை வைப்பதற்காக, அலுமினியத்தால் செய்யப்பட்ட அறைகள், பயணத்தின்போது அதிர்வு கள் ஏற்படாமல் இருக்க நவீன தானியங்கி 'கப்ளர்' கள், 'ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாஷ்பேசின்'கள், ஆபத்து ஏற்படும்போது பயணியர், ரயில் கார்டுடன் பேசுவதற்கான வசதி உள்ளிட்ட 12 வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 அம்ரித் ரயில்களை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

துாத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு, புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இத்திட்டம் வேண்டாம் எனக்கூறி, தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் வந்துள்ளது. அதனால், இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டுள்ளது.

ரயில்வே துறை சார்பில், தமிழகத்துக்கு செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமை யாக நிறைவு பெற்று, அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்துள்ளன.

விரைவில் அந்த பாலம் திறந்து வைக்கப்படும். ஜம்மு -- காஷ்மீர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்த பின்னர், அங்கு ரயில் இயக்கப்படும்.

விபத்து தவிர்ப்பு


ரயில் விபத்தை தடுக்கும், 'கவச்' கருவிகள் இதுவரை, 10,000 ரயில் இன்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை, கும்மிடிப்பூண்டி அருகே பாயின்ட் கருவியில் இருந்து போல்ட் கழற்றப்பட்டதை முன்கூட்டியே கண்டறிந்ததால், விபத்து தவிர்க்கப்பட்டது.

மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்காத வகையில் தடுப்பதற்காக, தற்போது புதிய வடிவமைப்பில் இத்தகைய போல்ட்கள் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன; யாராலும் அகற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், புதுவாயல் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில், ரயில் சக்கரங்கள் தயாரிப்பு பணிகளை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ஐ.சி.எப்., பொது மேலாளர் சுப்பாராவ் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us