sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும்

/

6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும்

6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும்

6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும்


UPDATED : ஜூலை 20, 2025 08:29 AM

ADDED : ஜூலை 20, 2025 06:44 AM

Google News

UPDATED : ஜூலை 20, 2025 08:29 AM ADDED : ஜூலை 20, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக, சென்னை கொரட்டூரில், 10 செ.மீ., துரைப்பாக்கம், கண்ணகி நகர், ஈஞ்சம்பாக்கத்தில் தலா 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

இது தவிர, ராணிப்பேட்டை, நாமக்கல், திருநெல்வேலி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

தென் மாநில பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ஏற்படுவதால், நேற்றும் மாலையில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் மழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.





குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில், கன மழை பெய்யும். தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளிலும் மழை பெய்யும். வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us