ADDED : டிச 29, 2024 02:08 AM
சென்னை:'தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும். அதிகாலையில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச. 31ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
ஜன. 1 முதல் 3ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.