sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

/

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்


UPDATED : டிச 29, 2024 07:40 AM

ADDED : டிச 29, 2024 05:47 AM

Google News

UPDATED : டிச 29, 2024 07:40 AM ADDED : டிச 29, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று காலை 10:00 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளத்தி, 6; ஈரோடு அம்மாபேட்டை, ஆற்காடு தலா, 5; வாலாஜா, ராணிபேட்டையில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும். அதிகாலையில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வரும், 31ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

வரும், 1 முதல் 3ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us