sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-10 கண்ணியம் மிக்க மாதங்கள்

/

ரம்ஜான் சிந்தனைகள்-10 கண்ணியம் மிக்க மாதங்கள்

ரம்ஜான் சிந்தனைகள்-10 கண்ணியம் மிக்க மாதங்கள்

ரம்ஜான் சிந்தனைகள்-10 கண்ணியம் மிக்க மாதங்கள்


ADDED : மார் 20, 2024 06:11 PM

Google News

ADDED : மார் 20, 2024 06:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாஹிலா என்பவர் நீண்ட நாள் கழித்து நபிகள் நாயகத்தை சந்தித்தார். அவரை பார்த்தவர், ''உமக்கு என்ன நேர்ந்தது? கடந்த முறை பார்த்த போது நல்ல தோற்றத்துடன் இருந்தீர்கள். இப்போது இப்படி இளைத்து விட்டீரே'' எனக் கேட்டார் நாயகம்.

''தொடர்ந்து நோன்பு நோற்கிறேன். தினமும் இரவில் மட்டும் சாப்பிடுகிறேன்'' என்றார். ''உங்களை நீங்களே வேதனையில் ஆழ்த்திக் கொண்டீர்கள். தொடர்ச்சியாக நோன்பு நோற்று மெலிந்து விட்டீர்'' என பின்வரும் கட்டளையை அவருக்கு இட்டார். ''ரம்ஜான் நோன்புகளைத் தவிர ஒவ்வொரு மாதமும் ஒருநாள் நோன்பு நோற்றுக் கொள்ளும்'' என்றார். அதற்கு பாஹிலா, ''நோன்பு நோற்பதற்கு எனக்கு வலிமை இருக்கிறது. எனவே நோன்பிருக்கும் நாட்களை சற்று அதிகப்படுத்துங்கள்'' எனத் தெரிவித்தார்.

''சரி. ஒவ்வோர் ஆண்டும் அஷ்ஹுருல் ஹுர்மு எனும் கண்ணியம் மிக்க நான்கு மாதங்களில் (ரஜப், துல்ஹாதா, துல்ஹஜ், மொகரம்) நோன்பு வையுங்கள்'' என்று கூறி அனுப்பினார்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி






      Dinamalar
      Follow us