sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெட்ரோல் குண்டுகள் வீசி பா.ம.க.,வினர் மீது தாக்குதல் * வி.சி., மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

/

பெட்ரோல் குண்டுகள் வீசி பா.ம.க.,வினர் மீது தாக்குதல் * வி.சி., மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

பெட்ரோல் குண்டுகள் வீசி பா.ம.க.,வினர் மீது தாக்குதல் * வி.சி., மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

பெட்ரோல் குண்டுகள் வீசி பா.ம.க.,வினர் மீது தாக்குதல் * வி.சி., மீது ராமதாஸ் குற்றச்சாட்டு


ADDED : ஜன 17, 2025 09:24 PM

Google News

ADDED : ஜன 17, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூரில், பா.ம.க.,வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசியதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த திருமால்பூரில், பா.ம.க.,வினர் மீது வி.சி., கட்சியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதில், இருவர் உடல் முழுதும் தீக்காயம் அடைந்து, உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாக்க, காவல் துறை முயற்சிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது..

பா.ம.க.,வினர் மீதான இந்த கொடிய தாக்குதலுக்கு வி.சி.,யினரின் ஜாதி வெறியும், கட்டுப்படுத்தப்படாத கஞ்சா புழக்கமும் தான் காரணம். வி.சி.,யினர் ஜாதி அடிப்படையிலான அட்டகாசம் மீண்டும் தலைதுாக்கியிருக்கிறது.

பா.ம.க.,வினர் மீது பெட்ரோல் குண்டு வீசிய ஆறு பேரையும் கைது செய்து, சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல் துறை, அவர்களில் பிரேம் உள்ளிட்ட இருவரை மட்டுமே கைது செய்துள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில், ஜாதி வெறி சக்திகளை கட்டுப்படுத்த, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

***






      Dinamalar
      Follow us