ADDED : ஆக 01, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு ஆக., 14 வரை காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 21ல் ஒரு படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தங்கராஜ் 40, லிங்கம் 55, செல்வம் 56, இருளாண்டி 53, ஆகியோரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இவர்களை வழக்கு விசாரணை நாளான நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரித்த நீதிபதி ஆக.,14 வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.