சிறுமியர் பலாத்காரம் தி.மு.க., ஆட்சியில் அதிகரிப்பு
சிறுமியர் பலாத்காரம் தி.மு.க., ஆட்சியில் அதிகரிப்பு
ADDED : மார் 21, 2026 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என காங்., -தி.மு.க., கட்சிகள் போராட்டங்கள் நடத்துகின்றன. காஸ் கிடைக்கவில்லை என கூறி, ஹோட்டல்களில் வேண்டுமென்றே விலைவாசியை அதிகரிக்கின்றனர். டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு என அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியரை பலாத்காரம் செய்வதும், பாலியல் தொல்லை அளிப்பதும், தி.மு.க., ஆட்சியில் அதிகரிக்கிறது.
டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என கூறிவிட்டு, மனமகிழ் மன்றங்களை திறக்கின்றனர். போதைப் பொருள், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை மறைக்க, முதல்வர் ஸ்டாலின், சிறுவர்களை அழைத்து 'ரீல்ஸ்' போடுகிறார்; சில அமைப்பினரை துாண்டி விட்டு, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என திசை திருப்பும் வேலையை செய்கிறார். உலக நாடுகளில், இஸ்லாமியர்கள் அச்சத்தில் உள்ள நிலையில், இங்கு, ரம்ஜான் நோன்பு திறப்பை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
- அர்ஜுன் சம்பத்,
நிறுவன தலைவர், ஹிந்து மக்கள் கட்சி

