கோவை, நீலகிரிக்கு 2 நாள் ரெட் அலர்ட்; இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
கோவை, நீலகிரிக்கு 2 நாள் ரெட் அலர்ட்; இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
UPDATED : மே 28, 2025 01:08 PM
ADDED : மே 28, 2025 01:06 PM

சென்னை: கோவை, நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (மே 28) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (மே 28) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:
ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)
* நீலகிரி,
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,
* தேனி,
* தென்காசி,
* திருநெல்வேலி
கனமழை (மஞ்சள் அலர்ட்)
* திருப்பூர்,
* திண்டுக்கல்,
* கன்னியாகுமரி
![]() |

ரெட் அலர்ட் (அதிகனமழை)
*கோவை
* நீலகிரி
ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)
* தேனி
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
மஞ்சள் அலர்ட் (கனமழை)
* திருப்பூர்
* திண்டுக்கல்