ADDED : ஜன 07, 2025 12:10 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிசம்பர் 18 முதல் வைகை அணையில் இருந்து தேவைக்கு ஏற்ப நீர் செல்கிறது. நேற்று முன்தினம் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1250 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம், நேற்று காலை வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.
நேற்று அணை நீர்மட்டம் 64.53 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 764 கன அடி.

