sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவிலில் ரீல்ஸ் வீடியோ; கேள்வியால் விளாசியது ஐகோர்ட்!

/

கோவிலில் ரீல்ஸ் வீடியோ; கேள்வியால் விளாசியது ஐகோர்ட்!

கோவிலில் ரீல்ஸ் வீடியோ; கேள்வியால் விளாசியது ஐகோர்ட்!

கோவிலில் ரீல்ஸ் வீடியோ; கேள்வியால் விளாசியது ஐகோர்ட்!

14


ADDED : அக் 29, 2024 01:55 PM

Google News

ADDED : அக் 29, 2024 01:55 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவேற்காடு கோவிலில், முன்னாள் பெண் தர்மகர்த்தா வளர்மதி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நடித்த அறநிலையத்துறை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

நாகை மாவட்டம், தெற்கு பால்பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்த கே.ஜெயபிரகாஷ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், 'சென்னை திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. மிகவும் பழமையான இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத் திருவிழா பிரமாண்டமான முறையில் நடக்கும். தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று, கோவிலில் நடந்த தர்மசங்கடமான நிகழ்வு பற்றிய காட்சிகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவின.

அந்த காட்சியில், கோவிலின் அறங்காவலர் வளர்மதியுடன், 12 பெண்கள் இணைந்து, கோவில் கருவறையின் முன் நடனமாடியுள்ளனர். அதை, 'ரீல்ஸ்' வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அறங்காவலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இரண்டு முறை புகார் மனு அளித்தேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. கோவிலின் புனிதம், மதிப்பை குலைக்கும் வகையில் நடந்த அறங்காவலர் உள்ளிட்டோர் மீது, ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை

மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ' திருவேற்காடு கோவிலில்,'ரீல்ஸ்' வீடியோ எடுத்த அறங்காவலர் மற்றும் பெண் ஊழியர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஹிந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று(அக்.,29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'திருவேற்காடு கோவிலில், எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவில், நடித்த முன்னாள் பெண் தர்மகர்த்தா மன்னிப்பு கோரியுள்ளதாக அறநிலையத்துறை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்தது.

மன்னிப்பு

இதற்கு ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: கடவுள் மீது பக்தி உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். கோவிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம். நடனம் ஆடலாமா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மன்னிப்பு ஏற்று நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

ரீல்ஸ் வீடியோவில் நடனமாடிய கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us