sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

/

பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு


UPDATED : ஏப் 05, 2025 02:54 AM

ADDED : ஏப் 05, 2025 01:44 AM

Google News

UPDATED : ஏப் 05, 2025 02:54 AM ADDED : ஏப் 05, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சேலம் பல்கலை துணை வேந்தர் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர் ஆர்.ஜெகநாதன். இவர், அரசு அனுமதியின்றி, விதிகளை மீறி சொந்தமாக பெரியார் பல்கலை தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை துவங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாக, ஊழியர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர். இதுபற்றி, பல்கலை ஊழியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பிய போது, ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக, துணை வேந்தருக்கு எதிராக புகார் எழுந்தது.

புகார் அடிப்படையில், சேலம் கருப்பூர் போலீசில் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது, மோசடி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.

வழக்கை ரத்து செய்ய, காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், 'எந்த முறைகேடும் நடக்கவில்லை' என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us