sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழிலாளி அடித்து கொலை உறவினர்கள் போராட்டம்

/

தொழிலாளி அடித்து கொலை உறவினர்கள் போராட்டம்

தொழிலாளி அடித்து கொலை உறவினர்கள் போராட்டம்

தொழிலாளி அடித்து கொலை உறவினர்கள் போராட்டம்

1


ADDED : ஜூன் 24, 2025 06:26 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குலசேகரன்பட்டினம்: அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், தேரியூர் ஆண்டிவிளையைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம், 39; கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 35, என்பவரை குடி போதையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் சுயம்புலிங்கம் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அங்கு சென்ற ஆறுமுகம், அவரது தம்பிகள் முருகன், 32, ராமர், 30, நண்பர் மணி, 34, ஆகியோர் சுயம்புலிங்கத்தை இரும்பு கம்பி மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர்.

அவர் மயக்கமடைந்த பின், அவர்கள் தப்பினர். துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுயம்புலிங்கம் நேற்று உயிரிழந்தார். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

'கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்' எனக்கூறி, அவரது உறவினர்கள் தர்ணா செய்தனர். திருச்செந்துார் டி.எஸ்.பி., மகேஷ்குமார் சமரசம் பேசினார்.






      Dinamalar
      Follow us