முதுமலையில் குடியரசு தின விழா; அணிவகுத்த வளர்ப்பு யானைகள்
முதுமலையில் குடியரசு தின விழா; அணிவகுத்த வளர்ப்பு யானைகள்
ADDED : ஜன 26, 2026 12:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் இன்று நடந்த குடியரசு தின விழாவில், வன ஊழியர்கள், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், குடியரசு தினம் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 26) நடந்தது. வன ஊழியர்கள், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, முதுமலை கள இயக்குனர் கிருபா சங்கர் தேசிய கொடி ஏற்றினார்.
வன ஊழியர்களுடன், வளர்ப்பு யானைகளும் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. விழாவில் குடியரசு தின விழாவில் முதுமலை துணை இயக்குனர் கணேசன், வன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

