ADDED : ஜூலை 18, 2025 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விரைவு பஸ்கள் குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வாயிலாக, தினமும் 2,500க்கும் மேற்பட்ட விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விரைவு பஸ்களில் பயணம் செய்வோரிடம், புகார்கள் பெறுகிறோம்.
சேவையை மேம்படுத்த, பொதுமக்கள் https://www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக, தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கருத்துகளை ஆய்வு செய்து, சேவையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

