sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை

/

அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை

அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை

அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 03, 2025 03:12 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:

அ.தி.மு.க., - தேன்மொழி: திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டியில் எழில் சூழ்ந்த மலைகள் மத்தியில், வைகை ஆற்று படுகையில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இதன் அருகேயுள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தில் சுற்றுலா பூங்கா அமைக்க வேண்டும். நிலக்கோட்டை சென்றாய பெருமாள் கோவிலுக்கு செல்வதற்கு, 500 படிகட்டுகள் ஏற வேண்டும். இயற்கை எழில் சூழ்ந்த கொடைக்கானல் மலையை காண்பதற்கு, 'ரோப் கார்' வசதி, பூங்கா ஆகியவை அமைக்க வேண்டும்.

அமைச்சர் ராஜேந்திரன்: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ளது. அந்த துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று, திட்ட மதிப்பீடு தயாரித்து, மாவட்ட கலெக்டர் தலைமையிலான சுற்றுலா குழு ஒப்புதலுடன் வந்தால், நிதி நிலைமைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

அ.தி.மு.க., - திண்டுக்கல் சீனிவாசன்: திண்டுக்கல் மாவட்டம், மலைகோட்டையில் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப என்று சொல்லாமல், அந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவித்து வசதிகள் செய்து தர வேண்டும். ஏற்கனவே, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். மாவட்ட அமைச்சர்களுடன் வந்து பார்ப்பதாக கூறினார். நீங்களாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us