sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்கரியுடன் அன்புமணி சந்திப்பு சாலை பணிகள் குறித்து கோரிக்கை

/

கட்கரியுடன் அன்புமணி சந்திப்பு சாலை பணிகள் குறித்து கோரிக்கை

கட்கரியுடன் அன்புமணி சந்திப்பு சாலை பணிகள் குறித்து கோரிக்கை

கட்கரியுடன் அன்புமணி சந்திப்பு சாலை பணிகள் குறித்து கோரிக்கை


ADDED : பிப் 14, 2025 12:40 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை, டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார்.

திண்டிவனம் - கிருஷ்ணகிரி இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் முதல் வாலாஜா வரையிலான பகுதியை, ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் முதல் செங்கல்பட்டு வரை, பறக்கும் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தொப்பூர் - பவானி தேசிய நெடுஞ்சாலையில், எருமப்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணியை கைவிட வேண்டும். மேச்சேரி பேரூராட்சி பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

தர்மபுரி -- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பாளையம்புத்துார் பிரிவு, சேஷம்பட்டி பிரிவு, தேவர் ஊத்துப்பள்ளம் பிரிவு, புறவடை, ஜாகீர் ஆகிய ஐந்து இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

தர்மபுரி -- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குண்டல்பட்டியில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்தை, தர்மபுரியில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அன்புமணி வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us