sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க கோரிக்கை

/

பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க கோரிக்கை

பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க கோரிக்கை

பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க கோரிக்கை


ADDED : மே 27, 2025 05:27 AM

Google News

ADDED : மே 27, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: “அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு உள்ள நிலையில் தொடர் மிரட்டலால், 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,” என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில், அவர் நேற்று அளித்த பேட்டி:

பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது முதல்முறை அல்ல. மிரட்டல் கடிதங்கள் தொடர்ந்து வருகின்றன.

இது தொடர்பாக, போலீசாருக்கு உரிய வகையில் தகவல் தெரிவித்தும், அது தொடர்பான தீவிர விசாரணை மேற்கொண்டதாக தெரியவில்லை.

இதனால், பழனிசாமிக்கு வந்திருக்கும் மிரட்டல் விஷயத்தில் தி.மு.க., அரசு தொடர்ந்து வேடிக்கை பார்க்கிறதோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

பழனிசாமியின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள உடனடியாக அக்கறை செலுத்த வேண்டும்.

எந்த மிரட்டலுக்கும் அஞ்சுபவர் அல்ல பழனிசாமி. அவருக்கு, ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இது தமிழக மக்களின் கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us