sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெலுங்கானா பாணியில் இடஒதுக்கீடு: கிருஷ்ணசாமி

/

தெலுங்கானா பாணியில் இடஒதுக்கீடு: கிருஷ்ணசாமி

தெலுங்கானா பாணியில் இடஒதுக்கீடு: கிருஷ்ணசாமி

தெலுங்கானா பாணியில் இடஒதுக்கீடு: கிருஷ்ணசாமி


ADDED : ஏப் 15, 2025 06:51 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தெலுங்கானாவை பார்த்தாவது, தமிழக அரசு, தங்களின் தவறான உள் இடஒதுக்கீட்டு கொள்கையை கைவிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இடஒதுக்கீட்டை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

பட்டியலின பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் எவ்வித பிரிவும் செய்யக்கூடாது என்பது, ஒரு சிலரின் வாதம். அதற்குள் நான் செல்லவில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, எந்தவொரு ஜாதிக்கும் முன்னுரிமை கொடுக்காமல், முறையாக பிரித்து தர வேண்டும் என்பதற்காக, தெலுங்கானா அரசு, ஏ, பி, சி என, மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது.

இதில், எந்த ஜாதிக்கும் முன்னுரிமையும் இல்லை; உள்ஒதுக்கீடும் இல்லை. இருக்கும் சதவீதத்தை மூன்றாக பிரித்து வழங்கி உள்ளனர். தெலுங்கானாவை பார்த்தாவது, தமிழக அரசு தங்களின் தவறான உள் இடஒதுக்கீட்டு கொள்கையை கைவிட்டு விட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இடஒதுக்கீட்டை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us